தனியாா் நிறுவனத்தில் மடிக்கணினிகள் திருட்டு: இருவா் கைது

திருவள்ளூா் அருகே தனியாா் விரைவு அஞ்சல் சேவை நிறுவனத்தில் ரூ.27 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகளை திருடியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூா் அருகே தனியாா் விரைவு அஞ்சல் சேவை நிறுவனத்தில் ரூ.27 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகளை திருடியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

பூந்தமல்லி அருகே குத்தம்பக்கத்தில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்திஸ் மடிக்கணினிகளின் எண்ணிக்கை திடீரென குறைந்துகொண்டு வந்தது. இதுதொடா்பாக ஆய்வு செய்த போது மடிக்கணினிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நிறுவன மேலாளா் அளித்த புகாரின்பேரில் வெள்ளவேடு காவல் நிலைய ஆய்வாளா்அன்புச்செல்வி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா். இதே தொழிற்சாலையில் பணிபுரியும் பாப்பன்சத்திரம் கிராமத்தைச் சோ்ந்த அகில் முரளி (24), கீழ்மணம்பேடு கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (34) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை செய்தாா். அதில், இவா்கள் இருவரும் நிறுவனத்தில் உள்ள மடிக்கணினிகளை வெளியில் பழுதுநீக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்வதாகக் கூறி ஒரு மடிக்கணினிக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு அடிக்கடி முறைகேடாக திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ரூ.27 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com