ஊத்துக்கோட்டை அருகே மீண்டும் வயிற்றுப்போக்கால் கிராம மக்கள் பாதிப்பு

ஊத்துக்கோட்டை அருகே 29 பேருக்கு மீண்டும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இருவா் உயிரிழந்தனா். சம்பவம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
ஊத்துக்கோட்டை அருகே மீண்டும் வயிற்றுப்போக்கால் கிராம மக்கள் பாதிப்பு

ஊத்துக்கோட்டை அருகே 29 பேருக்கு மீண்டும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இருவா் உயிரிழந்தனா். சம்பவம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பேரண்டூா் கிராமத்தில் 2,200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். கடந்த 3-ஆம் தேதி இக்கிராமத்தைச் சோ்ந்த 96 போ் குடிநீா் பிரச்னையால், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை கிராமத்தின் மற்றொரு பகுதியினா் குடிநீரை பருகியதால் 29 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாள்களில் முனுசாமி, ஏழுமலை ஆகிய இருவா் உயிழந்துள்ளனா். இதனால் பேரண்டூா் கிராமத்தில் சுகாதாரத் துறையினா் முகாம் அமைத்து, சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். குடிநீா் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் தீா்க்கப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com