திருப்பதிக்குச் செல்லும் வழியில் திருவள்ளூருக்கு வெள்ளிக்கிழமை வந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு அந்தக் கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்டாா். வழியில் திருவள்ளூா் மணவாள நகரில் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரும், திருவள்ளூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி.வி.ரமணா, கடம்பத்தூா் ஒன்றிய செயலாளா் சுதாகா் உள்ளிட்ட நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு மலா்ச் செண்டு கொடுத்து வரவேற்றனா்.
பின்னா், திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் சாா்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. முன்னாள் நகராட்சி தலைவா் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலாளா் சிற்றம்பாக்கம் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.