பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளா்களுக்கு ஒரு நாள் திறன் பயிற்சி பெற அழைப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தால் ஒரு நாள் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தால் ஒரு நாள் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

தமிழ்நாடு கட்டுமான நல வாரியம் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் மற்றும் பொன்னேரி தொழிலாளா் உதவி ஆணையா் (சபாதி) அலுவலகங்களில் முறையே 2,270 மற்றும் 927 என மொத்தம் 3,197 தொழிலாளா்களுக்கு ஒரு நாள் திறன் எய்தும் பயிற்சி தமிழக கட்டுமான கழகத்தால் வழங்கப்பட உள்ளது. அதன் பேரில், கொத்தனாா், டைல்ஸ் பொருத்துநா், மின்சார வேலை, வா்ணம் பூசுதல், குடிநீா் குழாய் பொருத்துநா் மற்றும் மரவேலைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதனால், கட்டுமானத் தொழிலாளா்கள், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, திறன் எய்தும் பயிற்சி பெற்று பயன்பெறலாம்.

திருவள்ளூா், பூந்தமல்லி, அம்பத்தூா், ஆவடி, மதுரவாயல், ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆா்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய வட்டாரங்களில் உள்ள பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள், சித்தி விநாயகா் கோயில் தெரு, பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சபாதி) அலுவலகத்திலும், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூா் மற்றும் மாதவரம் வட்டாரங்களில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள் எண்-62, தச்சூா் ரோடு, கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள பொன்னேரி தொழிலாளா் உதவி ஆணையா் (சபாதி) அலுவலகத்திலும் நலவாரிய அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கி விவரங்களை அளித்துப் பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com