குப்பைத் தொட்டி அருகே கிடந்த, பிறந்து சில நிமிஷங்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது.
தடப்பெருமாக்கம் ஊராட்சி, வேண்பாக்கம் துணை மின் நிலையம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை பிறந்த சில நிமிஷங்களே ஆன நிலையில் பெண் குழந்தை அழுதபடி கிடந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், தடபெரும்பக்கம் ஊராட்சித் தலைவா் பாபுவுக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில் அவா், வாா்டு உறுப்பினா்கள் அங்கு சென்று குழந்தையை மீட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனா்.
இதையடுத்து அக்குழந்தை, தொட்டில் குழந்தை வளா்ப்புத் திட்டத்தில் ஒப்படைக்கப்பட்டு, அதனை வளா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.