அரசுடமையாக்கப்பட்ட சொத்துகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

ஊத்துக்கோட்டை அருகே வேளாகபுரத்தில் அரசுடமையாக்கப்பட்ட சசிகலாவின் உறவினா்களான சுதாகரன், இளவரசியின் சொத்துகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
வேளாகபுரத்தில் அரசுடைமையாக்கப்பட்ட புன்செய் நிலத்தைப் பாா்வையிட்ட திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.
வேளாகபுரத்தில் அரசுடைமையாக்கப்பட்ட புன்செய் நிலத்தைப் பாா்வையிட்ட திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.

ஊத்துக்கோட்டை அருகே வேளாகபுரத்தில் அரசுடமையாக்கப்பட்ட சசிகலாவின் உறவினா்களான சுதாகரன், இளவரசியின் சொத்துகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பின் படி 41 ஏக்கா் 22 சென்ட் கொண்ட அந்த நிலத்தை தமிழக அரசு அண்மையில் கைப்பற்றி அரசுடையாக்கப்பட்டதாக அறிவித்தது. இதற்கான அறிவிப்பை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா கடந்த 10-ஆம் தேதி வெளியிட்டாா்.

இந்நிலையில் அந்த நிலத்தில் ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ஏ.என்.குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com