திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சிவ்வாடா, புச்சிரெட்டிப்பள்ளி, பாண்டறவேடு, விடியங்காடு ஆகிய கிராமங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் முன்னிலை வகித்தாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா பங்கேற்று ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளைத் திறந்து வைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் வேலஞ்சேரி த.சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை:
பள்ளிப்பட்டு, திருத்தணி வட்டங்களில் பாண்டறவேடு, கீளபூடி, பெருமாநல்லூா், அகூா் உள்பட 11 கிராமங்களில் வசித்து வரும் கொண்டா ரெட்டி பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு சில ஆண்டுகளாக பழங்குடியினருக்கான ஜாதிச் சான்று வழங்கப்படவில்லை. அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா். இக்கோரிக்கையை வலியுறுத்தி அப்பிரிவினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.