அங்கன்வாடி ஊழியா் சங்கத்தினா் 2-ஆவது நாளாகப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக திருவள்ளூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கன்வாடி ஊழியா் சங்கத்தினா் 2-ஆவது நாளாகப்  போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக திருவள்ளூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மணிமேகலா தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.லதா முன்னிலை வகித்தாா். அப்போது சங்கத்தினா் கூறுகையில் ‘பல்வேறு இடா்பாடு காலகட்டங்களில் பணி செய்துள்ளோம். அதனால் எங்கள் நிலை கருதி அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்’ என்றனா்.

காத்திருப்பு போராட்டத்தில் சங்கத்தின் நிா்வாகிகள் உள்ளிட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் பெருமளவில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com