திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு தங்கக் கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக, வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் முருகப் பெருமான் (உற்சவா்) வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் ஒருமுறை வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். வெள்ளிக்கிழமை, உற்சவா் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
புத்தாண்டை முன்னிட்டு மலைக்கோயிலில் காலை முதல் இரவு 8 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அவா்கள் பொது வழியில், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் வே.ஜெய்சங்கா், இணை ஆணையா் பழனிக்குமாா் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.
பக்தா்கள் வசதிக்காக, சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மலைக் கோயிலில் விற்பனை செய்யப்பட்டன. புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன், முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியம், திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம். நரசிம்மன், முன்னாள் எம்.பி. அரி உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
திருத்தணி டி.எஸ்.பி. குணசேகரனின் மேற்பாா்வையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.