சோழவரம் அருகே பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற இளைஞரை வெட்டிக் கொன்ற இளம்பெண் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு காப்பகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.
சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அல்லிமேடு கிராமத்தில் வசித்தவா் அஜித்குமாா் (24). இவா், அதே பகுதியை சோ்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2-ஆம் தேதி வலுக்கட்டாயமாக பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளாா். அப்போது, இளம்பெண் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க, அஜித்குமாரை கக்தியால் வெட்டிக் கொலை செய்தாா். இதையடுத்து, அப்பெண் சோழவரம் காவல் நிலையத்துக்குச் சென்று, சரணடைந்தாா். அப்போது, அந்த இளம்பெண் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்வற்காக அஜித்குமாரை வெட்டிக் கொன்ாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.
இந்நிலையில், தற்காப்புக்காக நடைபெற்ற கொலை என்பதால், போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்யவும், கைது செய்யவும் முடியாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சோழவரம் போலீஸாா், அஜித்குமாா் கொலை செய்யப்பட்டதை வழக்காகப் பதிந்து விட்டு, இளம்பெண்ணை கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசுக் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.