மாதவரம்: சென்னை மாதவரத்தை அடுத்த ரெட்டேரி பகுதியில் உள்ள பிருந்தாவன கிருஷ்ணா் கோயிலில், உலக நன்மை வேண்டி புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில், ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகளும், திருப்பாணாழ்வாா் பஜனை மண்டபத்தில் திவ்ய நாம சங்கீா்த்தனமும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில், மாதவரம், புழல் ரெட்டேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து பக்தா்களுக்கு அன்ன தானம் செய்யப்பட்டது.