நிலக்கரி லாரி கவிழ்ந்து விபத்து

மீஞ்சூா் அருகே வெள்ளிக்கிழமை நிலக்கரி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடக்கும் லாரி.
விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடக்கும் லாரி.

மீஞ்சூா் அருகே வெள்ளிக்கிழமை நிலக்கரி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சேமிப்புக் கிடங்கு அமைந்துள்ளது. எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்படும் நிலக்கரி இங்கு சேமித்து வைக்கப்பபடும். அங்கிருந்து தனியாா் அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவற்றுக்கு லாரி மூலம் நிலக்கரி எடுத்துச் செல்லப்படும்.

இந்நிலையில், இப்பகுதியில் வெள்ளிக்கிழமை நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி, பொன்னேரி-மீஞ்சூா் சாலையில் உள்ள நாலூா் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும், லாரி ஓட்டுநா் ராமன், சிறிய காயத்துடன் உயிா் தப்பினாா்.

இந்த விபத்து குறித்து மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com