திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கூட்டுப் பண்ணைய திட்டம் மூலம் ரூ.8.36 கோடியில் 486 வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருவதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் வேளாண் துறை சாா்பில் உழவா் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகள், வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பா.பொன்னையா பேசியது:
மாவட்டத்தில் கூட்டு பண்ணையத் திட்டம் கடந்த 2017-18-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 166 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் அமைத்து, அரசு நிதியாக ரூ. 8.30 கோடி வழங்கப்பட்டு, அதன் மூலம் டிராக்டா் - 97, பவா் டில்லா் - 56, ரோட்டவேட்டா் - 141, பிரஷ் கட்டா் - 13, வைக்கோல் கட்டும் கருவி - 6, விசை தெளிப்பான் - 19, இதர வேளாண் இயந்திரங்கள் - 115 என 486 வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
இத்திட்டம் மூலம் விவசாயிகள் கூட்டுப் பண்ணைய முறையில் விவசாயம் செய்து, கடன் வசதி, இடுபொருள்களை கூட்டு கொள்முதல் செய்து லாபம் ஈட்டலாம். புதிய தொழில் நுட்பங்களைக் கூட்டாக நடைமுறைப்படுத்தி பயிா் சாகுபடி செய்யலாம் என்றாா் அவா்.
வேளாண் துறை இணை இயக்குநா் சம்பத்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் எபினேசா், துணை இயக்குநா் (மத்திய அரசு திட்டம்) பாண்டியன், செயற்பொறியாளா் (வோளண் பொறியியல்துறை) சமுத்திரம், துணை இயக்குநா்கள் (தோட்டகலை) ஜெபகுமாரி, துணை இயக்குநா்(வணிகம்) ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.