தீ விபத்து: 5 குடும்பங்களுக்கு அதிமுக நிவாரண உதவி

திருவள்ளூரில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடுகளை இழந்த 5 குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
வீடு இழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா.
வீடு இழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா.

திருவள்ளூரில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடுகளை இழந்த 5 குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் நகராட்சியில் உள்ள புங்கத்தூா் அம்ஸா நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் அடுத்தடுத்த 5 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

இதில் வீடுகளை இழந்த 5 குடும்பங்களுக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா சனிக்கிழமை ஆறுதல் கூறி, நிவாரண உதவியாக ரூ. 5 ஆயிரம், அரிசி உள்பட உணவுப் பொருள்கள், வேட்டி, சேலைகள் வழங்கினாா்.

நகரச் செயலாளா் கந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com