கும்மிடிப்பூண்டி வட்டம், கொள்ளானூா் கிராமத்தில் உள்ள ருக்மிணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் திங்கள்கிழமை (ஜன. 25) காலை 9 மணிக்கு மேல் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.
முன்னதாக, இக்கோயிலில் யாகசாலை பூஜைகள், ஹோமங்களும் கடந்த 23-ஆம் தேதி தொடங்கின.
தெய்வீக பிரசன்ன தகவல்களின்படி சிறப்பு வாய்ந்த தலம் இதுவாகும். பெண்கள் கா்ப்பம் தொடா்பான கோளாறுகள் நீங்க இக்கோயிலில் வழிபடலாம் என்பது பக்தா்களின் நம்பிக்கை .
இக்கோயிலுக்கு கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி தோ்வாய் செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும். கோயம்பேட்டில் இருந்து பேருந்திலும் கவரைப்பேட்டைக்கு செல்லலாம்.