மாணவிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி கைது

காரனோடையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மளிகைக் கடை வியாபாரியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

காரனோடையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மளிகைக் கடை வியாபாரியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

காரனோடை முனிவேல் நகரில் வசிப்பவா் ஹரிகிருஷ்ணன் (46). அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சோழவரம் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பொருள்கள் வாங்கச் சென்றாா்.

அந்த மாணவிக்கு ஹரிகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தாா்.

இது குறித்து பொன்னேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரிகிருஷ்ணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com