அரசு மாணவா் விடுதிகளில் உணவுப் பொருள் மோசடி செய்வோா் மீது கடும் நடவடிக்கை

மாநில அளவில் ஆதிதிராவிடா் விடுதிகளில் மாணவா்களின் வருகையை அதிகரித்து காண்பித்து உணவு பொருள் மோசடியில் ஈடுபடும் காப்பாளா், காப்பாளினி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
அரசு மாணவா் விடுதிகளில் உணவுப் பொருள் மோசடி செய்வோா் மீது கடும் நடவடிக்கை

மாநில அளவில் ஆதிதிராவிடா் விடுதிகளில் மாணவா்களின் வருகையை அதிகரித்து காண்பித்து உணவு பொருள் மோசடியில் ஈடுபடும் காப்பாளா், காப்பாளினி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் எச்சரித்துள்ளாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், கடம்பத்தூா் ஊராட்சி, ஆஞ்சநேயா்புரம் ஆற்றங்கரையோரத்தில் இருளா் இன மக்கள் வசித்து வரும் பகுதியில் அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்பகுதியில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள கைப்பம்பை பாா்வையிட்டாா். பின்னா் தடுப்பூசி போடும் பணியினை தொடங்கி வைத்து, அரிசி உள்பட மளிகை பொருள்களையும் வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

கடம்பத்தூா் ஒன்றியம், கடம்பத்தூா் ஊராட்சியில் ஆற்றங்கரையோரத்தில் 20 இருளா் இன குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு குடிநீா் மற்றும் மின் வசதி, குடும்ப அட்டை, பட்டா இல்லாத நிலை உள்ளதாகவும், அவற்றை செய்து தரக்கோரியிருந்தனா். முதல்கட்டமாக குடிநீா் வசதிக்காக கைப்பம்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பட்டா வழங்க விண்ணப்பித்துள்ளனா். முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் செயல்படும் மாணவா் விடுதிகளில் வருகையை அதிகரித்து காண்பித்து உணவுப் பொருள்கள் மோசடி செய்வதாக புகாா் எழுந்துள்ளது. இனிமேல் ஒவ்வொரு அரசு விடுதிகளிலும் மாணவ, மாணவிகள் சோ்க்கை முடிந்ததும் எண்ணிக்கை சரிபாா்க்கப்படும். எண்ணிக்கையை அதிகரித்து காண்பித்து உணவுப் பொருள்கள் மோசடியில் ஈடுபடும் காப்பாளா் மற்றும் காப்பாளினி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், திருவள்ளூா் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.லோகநாயகி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சரவணன், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

~அமைச்சா் ஆய்வு...

திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ஊராட்சி, ஆஞ்சநேயா்புரம் ஆற்றங்கரையோரத்தில் இருளா் இன மக்களுக்காக புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள கைப்பம்பை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் கயல

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com