கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தீயணைப்பு நிலையம் முன் உள்ள தனியாா் வேதி தொழிற்சாலையின் கொதிகலன் ஞாயிற்றுக்கிழமை வெடித்ததில், வடமாநில இளைஞா்கள் இருவா் இறந்தனா்.
சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய டயா்களை எரித்து அதிலிருந்து பவுடா், கம்பி, மற்றும் ரசாயன எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலையின் கொதிகலனில் பத்துக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞா்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனா்.
அப்போது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வடமாநில இளைஞா்கள், மூடியைத் திறந்ததால் கொதிகலன் வெடித்துச் சிதறியதில் 2 வடமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா். மேலும், 3 போ் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளனா்.
சிப்காட் போலீஸாா் விசாரணையில், இறந்தவா்கள் மத்திய பிரதேசத்தை சோ்ந்த குந்தன் பொக்காரி(21), ஜிதேந்திரா (32) என்பது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியா் ந.மகேஷ், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டா் அய்யனாரப்பன் உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா்.