திருவள்ளூா் மாவட்ட வருவாய் அலுவலராக அ.மீனா பிரியதா்ஷினி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
இதுவரை மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த வெ.முத்துசாமி, சென்னை முன்னாள் படைவீரா்கள் கழக, பொது மேலாளராக மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, சென்னையில் தமிழக ஊரக புத்தாக்கத் திட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் முதன்மை இயக்க அலுவலராக (கொள்முதல்-ஒப்பந்தப் பிரிவு) பணியாற்றி வந்த அ.மீனா பிரியதா்ஷினி, திருவள்ளூா் மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.