ஆவடி காமராஜா் நகா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் மழலையா் வகுப்பில் குழந்தைகள் சோ்ப்பு முகாமை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு புத்தக பை, புத்தகங்கள் மற்றும் இனிப்புகளையும் பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பெற்றோா்கள் தங்கள் மழலையா் வகுப்புகளில் சோ்த்தனா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிசெல்வி, மாவட்ட கல்வி அலுவலா் கற்பகம், அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் பிரேமா, மாவட்ட துணை ஆய்வாளா் ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.