கடன் பிரச்னையால் பெண் வழக்குரைஞா் தனது மகளுடன் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு ஊராட்சி திடீா் நகரில் வீட்டில் வசித்தவா் கீதாஞ்சலி (51). சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தாா். இவரது கணவா் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இந்நிலையில், பி.காம் பட்டதாரியான இவரது மகள் சிவரஞ்சனி (24) தற்போது ஐஏஎஸ் தோ்வுக்கு படித்து வந்தாா். கீதாஞ்சலியின் தங்கையான பெங்களூரைச் சோ்ந்த ராஜலட்சுமி (45) கடந்த ஒரு வாரமாக கீதாஞ்சலியின் வீட்டில் தங்கியுள்ளாா்.
தொடா்ந்து திங்கள்கிழமை காலை ராஜலட்சுமி திருத்தணி முருகன் கோயிலுக்குச் செல்வதாகக் கூறிச் சென்று இரவு வீடுக்கு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து பாா்த்தபோது, ஒரே மின் விசிறியில் கீதாஞ்சலி மற்றும் சிவரஞ்சனி ஆகியோா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து கவரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.