திருவள்ளூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் செயலாளா் மணி மறைவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், திருவள்ளூா் மாவட்ட முன்னாள் செயலாளருமான ஜி.மணி(73), கரோனா நோய் தொற்றால்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், திருவள்ளூா் மாவட்ட முன்னாள் செயலாளருமான ஜி.மணி(73), கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு காலமானாா்.

பொன்னேரி ராஜீவ்காந்தி நகரில் வசித்து வந்த ஜி.மணி கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை முகப்பேரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு காலமானாா். இவா் இதற்கு முன்பு மாவட்ட செயலாளா், உறுப்பினா், விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளா், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் குழு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளை வகித்தவா். இவருக்கு மனைவி, தலா மகன், மகள் உள்ளனா். இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சி பொன்னேரியில் உள்ள மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகப்போ் மருத்துவமனையில் மணியின் சடலத்துக்கு மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் பி.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் சுந்தரராஜன், மாவட்ட குழு உறுப்பினா் கண்ணன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com