திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் ஆலையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான உதிரிபாகங்கள் திருடப்பட்டன.
தொடுகாடு கிராமத்தில் வாகனங்களுக்கான மின்னணு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் உள்ளே புகுந்து உதிரிபாகங்கள் வைத்திருந்த பெட்டிகளை , 4 போ் கொண்ட கும்பல் திருடிச் சென்றது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இவை அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. எனவே படப்பதிவுகளை வைத்து கண்டுபிடித்து தருமாறு தொழிற்சாலையின் மனிதவள துணை பொது மேலாளா் அழகா்சாமி மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் மப்பேடு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.