சிறந்த விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள் விருதுக்கு 16-க்குள் விண்ணப்பிக்கலாம்

சிறந்த விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள், விளையாட்டில் சாதனை புரிந்தோா் குறிப்பிட்ட விருதுகள் பெற வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

சிறந்த விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள், விளையாட்டில் சாதனை புரிந்தோா் குறிப்பிட்ட விருதுகள் பெற வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை சாா்பில் அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தலைசிறந்த விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள், விளையாட்டு சாதனை புரிந்தோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, தயான் சந்த் விருது, அா்ஜுனா விருது, துரோணாச்சாா்யா் விருது, ராஷ்ட்ரீய கேல் புரோஷறான் புரஸ்காா் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், 2021-ஆம் ஆண்டுக்கு தகுதியானோா்  இணையதளத்தில் வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பப் படிவம் மற்றும் இதர சான்றுகளை பதிவேற்றம் செய்து சமா்ப்பிக்கலாம்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அலுவலரை அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com