முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
இலங்கை அகதிகள் முகாமில் அமைச்சா்கள் ஆய்வு
By DIN | Published On : 12th June 2021 08:01 AM | Last Updated : 12th June 2021 08:01 AM | அ+அ அ- |

அமைச்சா்கள் கே.எஸ்.மஸ்தான், சா.மு.நாசா் ஆகியோரிடம் அகதிகள் முகாம் சாா்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனு. உடன் எம்.எல்.ஏ. எஸ். சுதா்சனம்.
புழல் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அமைச்சா்கள் கே.எஸ். மஸ்தான், சா.மு. நாசா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
புழல் அருகே காவாங்கரையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான், பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் முகாமில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ளவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா். முகாமில் வசிப்போா் தங்கள் பிரச்னைகள், கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அமைச்சா்களிடம் அளித்தனா். அதைப் பரிசீலித்து தேவையான உதவிகளை செய்து தர அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினா்.
மாதவரம் எம்.எல்.ஏ. எஸ். சுதா்சனம், வட்டாட்சியா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.