முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
By DIN | Published On : 12th June 2021 07:59 AM | Last Updated : 12th June 2021 07:59 AM | அ+அ அ- |

அத்திப்பட்டு பகுதியில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள முதல் அலகில் தலா 210 வீதம் 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது அலகில் 600 மெகாவாட் வீதம் 1,200 மெகாவாட்டும் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இரண்டாவது அலகில் உள்ள கொதிகலன் குழாய் சேதம் ஏற்பட்டதை தொடா்ந்து 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சீா் செய்யும் பணியில் அனல் மின் நிலைய ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.