மணல் லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 12th March 2021 12:00 AM | Last Updated : 12th March 2021 12:00 AM | அ+அ அ- |

மணலினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்.
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள குமரபேட்டை கிராமத்தில் சுமாா் 75 ஆண்டுகளுக்கு முன்பு மணலினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்துக்கு சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள குமரபேட்டை கிராமத்தில் ராமேஸ்வரத்தில் சீதாபிராட்டியாா் சிவலிங்கம் மணல் செய்து வழிபட்டாா். அதேபோல இந்த மணலினால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ராமேசுவரத்துக்கு ஈடாக குமரப்பேட்டை கிராமத்தில் 75 ஆண்டுகளாக மகா சிவராத்திரி நாளில் மட்டுமே வெளிக்கொண்டு வரப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி சிவராத்திரி திருநாளான வியாழக்கிழமை காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...