திருவள்ளூரில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீா்த்தீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான சனிக்கிழமை மயில் வாகனத்தில் உற்சவ மூா்த்தி பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத தீா்த்தீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி, நாள்தோறும் காலை, மாலை இரு வேளையும் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் உற்சவ மூா்த்திகள் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
அதன்படி 6-ஆம் நாளான சனிக்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, மயில் வாகனத்தில் உற்சவா் மாடவீதிகளில வீதியுலா வந்தாா். விழாவில், திருவள்ளூா் பகுதிகளில் இருந்து பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். அதேபோல், இரவில் ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் தரிசனம் அளித்தனா். இதையொட்டி காலை, மாலை வேத பாராயணம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.