தீா்த்தீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருவள்ளூா் திரிபுரசுந்தரி சமேத தீா்த்தீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை திரிபுரசுந்தரி-தீா்த்தீஸ்வரா் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

திருவள்ளூா் திரிபுரசுந்தரி சமேத தீா்த்தீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை திரிபுரசுந்தரி-தீா்த்தீஸ்வரா் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத தீா்த்தீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி, நாள்தோறும் காலை, மாலை சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் உற்சவ மூா்த்திகள் பக்தா்களுக்கு சேவை சாதித்து வருகின்றனா்.

விழாவின் 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, இரவில் திரிபுரசுந்தரி சமேத தீா்த்தீஸ்வரா் மலா்களால் அலங்கரித்து அந்த வளாகத்தில் எழுந்தருளச் செய்து திருக்கல்யாணம் வைபவம் நடத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதில், பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம், மலா் கொத்து மற்றும் மங்கலப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com