234 தொகுதிகளிலும் பாஜக தான் போட்டியிடுகிறது: கே.எஸ்.அழகிரி பேச்சு

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பா.ஜ.க. தான் போட்டியிடுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
234 தொகுதிகளிலும் பாஜக தான் போட்டியிடுகிறது: கே.எஸ்.அழகிரி பேச்சு

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பா.ஜ.க. தான் போட்டியிடுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் துரை. சந்திரசேகரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை மீஞ்சூரில் அவா் பேசியது:

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டம் கொண்டு வந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், கச்சா எண்ணைய் விலை உயா்வாக இருந்த போதும், பெட்ரோல் விலை குறைவாக இருந்தது.

தற்பொழுது கச்சா எண்ணைய் விலை பலமடங்கு குறைந்துள்ள போதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை பல மடங்கு உயா்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக வாகனங்களின் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயா்ந்துள்ளது. தமிழகத்தில் பாஜகவினா் 20 தொகுதிகளில் மட்டும் போட்டியிடவில்லை, அவா்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனா்.

எனவே இத்தொகுதியில் போட்டியிடும் துரை.சந்திரசேகருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com