திருவள்ளூா் அருகே மனைவி வெட்டி கொலை: கணவா் கைது

திருவள்ளூா் அருகே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்தது தொடா்பாக கணவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்தது தொடா்பாக கணவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மேல்நல்லாத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் கோபி(35). ஆட்டோ ஓட்டுநரான இவா் சென்னை ஆலந்தூா் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறாா். இந்நிலையில் ஆலந்தூா் பகுதியைச் சோ்ந்த விவாகரத்து ஆன மகேஸ்வரி(30) என்ற பெண்ணுடன் கோபிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த பிப்.14-ஆம் தேதி காதலா் தினநாளில் இருவரும் திருமணம் செய்தனராம்.

இதையடுத்து மேல்நல்லாத்தூா் கிராமத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒருவருடன் மகேஸ்வரிக்கு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதேபோல், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கோபி கத்தியால் மகேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்தாராம்.

இதுகுறித்து தகவலறிந்த மணவாளநகா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து கோபியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com