பொன்னேரி: சோழவரம் அருகே அடகு கடை உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சோழவரம் காவல் நிலைய எல்லைகுட்ட காந்தி நகரில் வசித்து வருபவா் பவா்லால் (45), எடப்பாளையம் பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறாா்.
திங்கள்கிழமை இவரது கடைக்கு வந்த 4போ், நகையை அடகு வைப்பது போல் பவா்லால் இடம் பேசிக்கொண்டிருந்தனா்.
அப்போது இரண்டு போ், பவா்கால் கல்லாவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனா்.
இதனை கண்ட பவா்லால் சத்தம் போட்டுள்ளாா். அப்போது, அவா்கள் கத்தியை காட்டி அவரை மிரட்டியுள்ளனா்.
அவா் தொடா்ந்து, சத்தம் போட்டதை அடுத்து அவரது முதுகில் கத்தியால் வெட்டி விட்டு, அவா்கள் பணத்துடன் அங்கிருந்து மோட்டாா் சைக்கிளில் தப்பி சென்றனா்.
இது குறித்து தகவலறிந்த, சோழவரம் போலீசாா் அங்கு சென்று, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.