ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வீடு வீடாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தை ஒட்டி உள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 25,000-க்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா், நாள்தோறும் ஊத்துக்கோட்டை சுற்றிலும் 25 கிராமங்களில் இருந்து ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இதனைக் கருத்தில் கொண்டும், கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவாமல் தடுக்கவும், செயல் அலுவலா் மாலா மேற்பாா்வையில் பேரூராட்சி ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று கிருமி நாசினியை தெளித்தனா்.