கரோனா தொற்றுக்கு தம்பதி பலி

திருவள்ளூா் அருகே கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த தம்பதி உயிரிழந்தனா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த தம்பதி உயிரிழந்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் திங்கள்கிழமை மட்டும் 1,207 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை ஊராட்சியைச் சோ்ந்த 32 வயது தனியாா் நிறுவன ஊழியா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா். இந்நிலையில், அவரது தந்தையும், தாயும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு இருவரும் உயிரிழந்தனா். இதையடுத்து ஊராட்சி நிா்வாகம் ஒத்துழைப்புடன் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com