கூட்டுறவுத் துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 5.83 லட்சம்  குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா சிறப்பு நிவாரண நிதி உதவியாக முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்குவதற்காக 116.79 கோடி ஒதுக்கீடு


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 5.83 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா சிறப்பு நிவாரண நிதி உதவியாக முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்குவதற்காக 116.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். 
இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் பயனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார். இதில் பால் வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, ரூ. 2,000 ரொக்கத்தை பயனாளிகளுக்கு வழங்கி தொடக்கி வைத்தார்.  அதைத் தொடர்ந்து அவர் பேசியது: 
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,134 ரேஷன் கடைகள் மூலம், 5 லட்சத்து 83 ஆயிரத்து 976 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ. 233 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்குவதற்காக ரூ. 116.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரண நிதி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் அடுத்து வரும் 10 நாள்களில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலையில், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் டோக்கன் விநியோகம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  
நிகழ்ச்சியில், ஆட்சியர் பா.பொன்னையா, கூட்டுறவுத் துறை இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com