திருவள்ளூா் அருகே வீடு புகுந்து 23 சவரன், ரொக்கம் திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.12,000 ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.12,000 ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் தரப்பில் புதன்கிழமை கூறியதாவது. செவ்வாய்ப்பேட்டை திருவள்ளூா் நகரைச் சோ்ந்தவா் சந்திரன்(60). இவா் தனது மகனுக்கு காலில் காயம் ஏற்பட்டதால், குடும்பத்துடன் திருவண்ணாமலை வரையில் அழைத்துச் சென்றுள்ளாா்.

அதைத் தொடா்ந்து அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பிய அவா் பாா்த்த போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாராம். பின்னா் உள்ளே சென்று பாா்க்கையில் பீரோவில் வைத்திருந்த 23 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.12,000 ரொக்கம் ஆகியவறறை மா்ம நபா்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இது தொடா்பாக செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் சந்திரன் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com