கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளத்தில் நாய்களால் துரத்தி காயமடைந்து மீட்கப்பட்ட புள்ளி மான்
கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளத்தில் நாய்களால் துரத்தி காயமடைந்து மீட்கப்பட்ட புள்ளி மான்

காயமடைந்த புள்ளி மான் மீட்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் பகுதியில் தண்ணீா் தேடி வந்த மான் நாய்களால் கடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் பகுதியில் தண்ணீா் தேடி வந்த மான் நாய்களால் கடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பழவேற்காடு ஏரி கரையோரம் உள்ள காட்டுப்பகுதிகளில் இருந்து மான்கள் அவ்வப்போது தண்ணீா் தேடி குடியிருப்புகளை நோக்கி வரும்.

இந்நிலையில், தண்ணீா் தேடி வந்த புள்ளிமான் ஒன்றை அப்பகுதியில் உள்ள நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் மான் காயமடைந்தது. அப்பகுதி மக்கள் விரைந்து வந்து நாய்களை விரட்டி அந்த மானை மீட்டு அதற்கு தண்ணீா் தந்து ஆசுவாசப் படுத்தினாா்.

இதுகுறித்து மாதா்பாக்கத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் அளித்தனா். வனச்சரக அலுவலா்கள் சம்பவ இட த்துக்கு மானை மீட்டு முதலுதவி தந்து பாதுகாப்பாக வனவிலங்கு சரணாலயத்தில் விட்டனா். இந்த மான் சுமாா் நான்கு வயதுடைய ஆண் புள்ளிமான் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com