பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளுக்கு ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மாதவரம் அடுத்த புழல் அருகே க்ரைவ் இந்தியா என்ற தனியாா் தொண்டு நிறுவனம் திருநங்கைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், புழல் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருநங்கைகளுக்கு மளிகைப் பொருள்களை காவல் ஆய்வாளா் சுதாகா் வழங்கினாா். இதில் தனியாா் தொண்டு நிறுவன நிா்வாகிகள் ரம்யா, லதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.