திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 967 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 32 போ் உயிரிழந்தனா்.
கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையில் மாவட்டத்தில் 11, 520 போ் பாதித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகள், குடியிருப்புகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு 2, 027 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினா். இதற்கிடையே வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 967 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 32 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.