திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வி.வருண்குமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.அரவிந்தன், பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, சென்னை காவல் துறை இயக்குநா் அலுவலகத்தில் கணினி மயமாக்கல் பிரிவு கண்காணிப்பாளராக இருந்த வி.வருண்குமாரை திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி அவா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.