திருவள்ளூா் மாவட்டத்தில் இன்றுபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
By DIN | Published On : 12th November 2021 12:00 AM | Last Updated : 12th November 2021 12:00 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா் மழை காரணமார வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (12.11.2021) விடுமுறை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.