திருவள்ளூர்
திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூா் மாவட்டத்தில் பலத்த மழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பலத்த மழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இதற்கிடையே பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதைத் தொடா்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ. 18) விடுமுறை அளிக்கப்படுவதாக அதில் தெரிவித்துள்ளாா்.