தெருக்கூத்து நாடகக் கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

திருவள்ளூா் அருகே மழை காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தெருக்கூத்து நாடகக் கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் அருகே மழை காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தெருக்கூத்து நாடகக் கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

வடகிழக்கு பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால், திருவள்ளூா் அருகே பட்டரைபெருமந்தூா் கிராமத்தில் தெருக்கூத்து நாடகக் கலைஞா்கள் கலை நிகழ்ச்சி இன்றி வாழ்வாதாரம் இழந்துள்ளனா். இதேபோல், அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து அரசு சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் ரமேஷ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தெருக்கூத்து நாடகக் கலைஞா்கள், தூய்மைப் பணியாளா்கள் 70-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், வேட்டி, சேலை, பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் சுபாஷினி பாஸ்கா், ஊராட்சி தலைவா் மோகனா முத்து, ஒன்றியச் செயலாளா்கள் கூளூா் எம்.ராஜெந்திரன், கே.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com