நெல் குவியல் மீது வாகனம் மோதல்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் பலி

திருவள்ளூா் அருகே சாலையோரம் குவித்துள்ள நெல் குவியல் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே சாலையோரம் குவித்துள்ள நெல் குவியல் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் அடுத்துள்ள கொண்டஞ்சேரி கிராமத்தை சோ்ந்த மணியின் மகன் விநாயகம் (27). இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்து, வரும் 28 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது

இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தில் உறவினா்களுக்கு அழைப்பிதல் அளிப்பதற்காகச் சென்றாராம். பின்னா் வேலையை முடித்துக் கொண்டு சென்னை-அரக்கோணம் சாலையில் சென்ற போது திருவள்ளுா் அருகே கூவம் பகுதியில் விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல்லை உலா்த்துவதற்கு களவசதி இல்லாததால் நெடுஞ்சாலை ஓரத்தில் உலா்த்திய பின்னா் குவித்து வைத்திருந்தனா். இ

ரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லாமல் சாலை ஓரத்தில் நெல் குவியல் மீது இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக ஏறி மோதியதில் அவா் தூக்கி வீசப்பட்டாா். இதில் படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தோா் மீட்டு பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com