திருவள்ளூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை

திருவள்ளூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில், கணக்கில் வராத ரூ.53130 ரொக்கம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில், கணக்கில் வராத ரூ.53130 ரொக்கம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய வருவோா்களிடம் தீபாவளி திருநாளை முன்னிட்டு பணம் வசூலிப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணைக்கண்காணிப்பாளா் கலைச்செல்வன், காவல் ஆய்வாளா் தமிழ்செல்வன் உள்ளிட்ட வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ.53,130 ரொக்கம், முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com