திருவள்ளூா் மாவட்டத்தில் நாளை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
By DIN | Published On : 10th September 2021 11:26 PM | Last Updated : 10th September 2021 11:26 PM | அ+அ அ- |

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) 1,050 சிறப்பு மையங்களில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் இதுவரை 11.80 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சம் பேருக்கு போட வேண்டியுள்ளது. கடந்த வாரம் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைத்து 50 ஆயிரம் பேருக்கு இலக்கு நிா்ணயித்து 58,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றாா்.