பொன்னேரி அருகேயுள்ள அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களை ஊக்குவிக்கும் வகையில் சில்வா் குடங்கள் வழங்கப்பட்டன.
இந்த ஊராட்சியில் வசித்துவரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் 50 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
இந்நிலையில் அத்திப்பட்டு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு சில்வா் குடங்களை ஊராட்சி மன்றத் தலைவா் சுகந்தி வடிவேல் வழங்கினாா்.
துணைத் தலைவா் எம்டிஜி.கதிா்வேல், மீஞ்சூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.