கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் எம்.ஜி.ஆா். சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்ட தலைவா் ஷேக் கபூா் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் டி.தாஸ், பொருளாளா் பி.எம்.சுப்பிரமணியம், அமைப்புச் செயலாளா் வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயலாளா் கே.பி.நரசிம்மன் சிறப்புரையாற்றி ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். இதில், ஆசிரியா்களுக்கு உடனே இரண்டு மாத ஊதியத்தை விடுவிக்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புச் செய்து பணமாக்க விதித்துள்ள காலவரையற்ற தடையை நீக்குதல், ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றுதல், ஆசிரியா்-மாணவா்கள் சமூக உறவை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் திரளாகப் பங்கேற்றனா். முன்னாள் மாவட்ட பொருளாளா் டி.கணபதி நன்றி கூறினாா்.