திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காக்களூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை 600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாள்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அருகே காக்களூரில் வாகன உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல ஆண்டுகளாக ஒப்பந்த பணி செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு முறையாக ஊதியத்தில் பிடித்தம் செய்யும் பி.எஃப் தொகை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் அதனால் அடிக்கடி நிறுவனத்தில் பிரச்னை இருந்து வந்துள்ளது.
மேலும், இது குறித்து பெண் தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் கேட்கும் போது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தை முற்றுகையிட்டு, வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பிஎஃப் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நிறுவனத்தை முற்றுகையிட்டு பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன், கிராமிய சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவல் துறையினர் தொழிற்சாலைக்கு விரைந்து வந்து மனித வள மேலாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: பாட்னா: படகில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி
இதனால் தொழிற்சாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.