திருவள்ளூரில் சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தா்னா

சமையலா் மற்றும் உதவியாளா் காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
திருவள்ளூரில் சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தா்னா

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளா், சமையலா் மற்றும் உதவியாளா் காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் ஏ.சிவா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினாா். இதில் மாவட்ட செயலாளா் சுலோசனா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாநில தலைவா் ஏ.சந்திரதாசன் பங்கேற்று தா்னா போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

சத்துணவு ஊழியா்களின் பணிக் காலம் 60 வயது என்பதை 62 ஆக உயா்த்த வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா செய்தனா். போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் திரளானோா் பங்கேற்று முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com